மிமுலஸ் மலர் மருந்து (Mimulus), குறிப்பிட்ட விசயங்களுக்கு பயப்படும் நபர்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதன் சில முக்கியப் பயன்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மிமுலஸ் மலர் மருந்தின் குணாதிசயங்கள்
மிமுலஸ் குணாதிசயங்கள் உள்ள மனிதர்கள், நோய்கள், இருட்டு, விலங்குகள், உயரங்கள் போன்ற குறிப்பிட்ட சில விசயங்களுக்கு அஞ்சுவார்கள். பொது இடங்களில் பேசும்போது அல்லது மற்றவர்களுடன் பழகும்போது இவர்களுக்கு பதற்றம் மற்றும் நடுக்கம் ஏற்படும்.
கூச்ச சுபாவம் அதிகம் கொண்ட நபர்களாக இருப்பார்கள். மனதில் தெளிவு இல்லாததால் அதிகமாக பயத்தால் பாதிக்கப்படுவார்கள். தங்களின் பயத்தையும் வெளிப்படையாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.
மிமுலஸ் மலர் மருந்தின் பயன்கள்
மிமுலஸ் மலர் மருந்து பயத்தை குறைத்து, தைரியத்தை அதிகரிக்கிறது. மன அமைதியைக் கொடுத்து, பதட்டத்தைக் குறைக்கிறது. தன்னம்பிக்கையை அதிகரித்து, மற்றவர்களுடன் சகஜமாகப் பழக உதவுகிறது.
மனதில் தெளிவை ஏற்படுத்தி, சரியான முடிவுகளை எடுக்க உதவுகிறது. உணர்வுகளை வெளிப்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
இந்த மலர் மருந்து, குறிப்பிட்ட விசயங்களுக்கு பயப்படும் நபர்களுக்கு தைரியத்தையும், மன அமைதியையும் கொடுக்கிறது.
Leave feedback about this