பாட்ச் மலர் மருந்துகளின் பயன்பாடுகள். மலர் மருந்துகள் அனைத்து தரப்பு மக்களுக்கும், பல வகையில் பயன் அளிக்கக் கூடியது. உதாரணத்திற்கு:
சிறுவர்களுக்கு – பள்ளிப் பாடங்களின் மன அழுத்தம், தேர்வு பயம், தனிமை உணர்வு, பள்ளி நண்பர்களின் பிரச்சினைகள், போன்றவற்றை சமாளிக்க உதவும்.
முதியவர்களுக்கு – மன அமைதியை அதிகரிக்க, பழைய நினைவுகளால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க, தனிமை உணர்வை நீக்க என்று பல வகைகளில் பயன்படும்.
நோயாளிகளுக்கு – நோய் மற்றும் மரணத்தின் மீதுள்ள பயத்தை போக்க, மருந்து மாத்திரை மற்றும் வைத்தியங்களால் உருவாகும் மன பாதிப்புகளை சரி செய்ய, நோய்களால் ஏற்படும் மனச்சோர்வை குறைக்க, என்று பல வகைகளில் உதவி செய்யும்.
மனநல பாதிப்பு உள்ளவர்களுக்கு – மனநல மருத்துவர்கள் வழங்கும் சிகிச்சை மற்றும் மருந்துகளுடன் இணைத்து மலர் மருந்தையும் பயன்படுத்தினால் விரைவாக பலன் தெரியும்.
மேலும், அனைத்து தரப்பு மக்களும் மனநல பாதிப்புகளை சரிசெய்துகொள்ள மலர் மருத்துவம் பேருதவியாக இருக்கும். சரியான மலர் மருந்தை தேர்ந்தெடுத்து, சரியாக ப் பயன்படுத்தினால் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.
Leave feedback about this