எதிர்காலம் என்பது என்ன? உண்மையை சொல்வதானால் எதிர்காலம் என்பது மனிதர்களின் கற்பனையில் மட்டுமே இருக்கிறது. எதிர்காலம் வருங்காலம் என்று எந்த காலத்தையும் யாரும் சந்திக்க மாட்டார்கள்.
ஒவ்வொரு நாளும் நாம் சந்திப்பது நிகழ்காலத்தை மட்டுமே. இன்று நாம் சந்தித்துக் கொண்டிருப்பது நேற்று வரையில் நாம் நம் வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக் கொண்டோம் என்பதற்கான பலனை.
நாளை நாம் சந்திக்கப் போவது, இன்று நம் வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக் கொள்கிறோம்? ஒவ்வொரு முடிவையும் எவ்வாறு எடுக்கிறோம்? என்பதற்கான பலனை.
சுருக்கமாக சொல்வதானால், எதிர்காலம் என்பது இன்று நாம் விதைத்த விதைகளுக்கான விளைச்சல். இன்றய தொடர்ச்சிதான் நாளை.
Leave feedback about this