நோய்கள்

எந்த நோயையும் கண்டு அஞ்சாதீர்கள்

எந்த நோயையும் கண்டு அஞ்சாதீர்கள். இயற்கை மருத்துவத்திலும், கை மருத்துவத்திலும் அனைத்து வகையான தொந்தரவுகளையும் குணப்படுத்திக் கொள்ள முடியும். உங்கள் உடலில் இயக்கத்தை நம்புங்கள், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை நம்புங்கள். காசுக்காக பல பொய்களைக் கூறி கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழிக்கக்கூடத் தயங்காத பாவிகள் தான் உங்களின் நோய்களைக் குணப்படுத்தி உங்களைக் காப்பாற்றப் போகிறார்களா?

அறிகுறிகள் இல்லாத கோவிட்-19 தொற்று என்று ஒரு செய்தி நாளிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் வந்ததை அனைவரும் பார்த்திருப்பீர்கள். அது எப்படி அறிகுறிகள் இல்லாமல் நோய் உண்டாகும்? சுடாத நெருப்பு, குளிராத நீரைப்போன்று அரசியல்வாதிகளுக்குத் தேவைப்பட்டால், மக்களை ஏமாற்ற வேண்டும் என்றால் எந்த வகையான நோயும் யாருக்கும் உண்டாகும். ஆதிக்கத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் சொல்வது தானே சட்டம்?

யாரையும் நம்பாதீர்கள், உங்களை நீங்கள் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். உங்கள் உடலைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். அடிப்படை உடல் பராமரிப்பு, இயற்கை மருத்துவம், வீட்டு மருத்துவம் போன்றவற்றை கற்றுக் கொள்ளுங்கள், ஆரோக்கியமாக வாழுங்கள்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *