Month: February 2023

Month: February 2023
காதல் கவிதை

காதலி

உன்னைக் காணும் வேளைகளில்திருவிழா சந்தையின் நடுவில்ராட்டினத்தை முதன்முதலாய்பார்க்கும் குழந்தையைப் போன்று அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும்வியந்து பிரமிப்புடன் பார்க்கிறேன்நெருங்கிவரத் துடிக்கிறது மனதுஇருந்தாலும் உள்ளுக்குள் அச்சம் உன்னைப் பார்க்கவும், பேசவும்கைகோர்த்து நடக்கவும், சிரிக்கவும்தழுவி இதழில் முத்திரையிடவும்ஆசை கலந்த பயமாக இருக்கிறது வானவில்லின் ரசிகனாய்சலனமின்றி ரசித்துவிட்டுஉன் நினைவுகளை ஓவியமாய்சுமந்து திரும்பிச் செல்கிறேன்

Read More
வாழ்க்கை கவிதை

வாழ்க்கை

வாழ்க்கையை பரீட்சையாக எண்ணிபலர் பதில் எழுதத் துடிக்கிறார்கள்சிலர் கதைகளாக எண்ணிகற்பனையில் மிதக்கிறார்கள் வாழ்க்கை அனைவருக்கும் சமமல்லதகுதிக்கு ஏற்ப கொடுக்கப்படுகிறதுவாழ்க்கை என்றும் நிரந்தரமல்லதகுதிக்கேற்ப மாறக்கூடியது சிலருக்குக் கவிதை, சிலருக்குக் கட்டுரைசிலருக்கு அகராதி, சிலருக்குக் கதைசிலருக்கு நாவல், சிலருக்குச் சரித்திரம்சிலருக்கு வெற்று காகிதம் கொடுக்கப்பட்டதை முதலில் ஆராய்ந்துபுரிந்துக் கொள்ளுங்கள் – பிறகுவாழத் தொடங்குங்கள்

Read More
வாழ்க்கை கவிதை

மதமும் மனிதனும்

இறைவனும் இயற்கையும் பேதம்பார்ப்பதில்லை – இந்து, முஸ்லிம்,கிறித்தவன், பௌத்தன், சமணன்,நாத்திகன் என எந்தப் பேதமும் இல்லாமல் பசி, தாகம், தூக்கம் அனைவருக்கும் உண்டுபிறப்பும் இறப்பும் அனைவருக்கும் சமமேநோயும், மரணமும், இன்பமும், துன்பமும்யாருக்கும் சலுகை வழங்குவதில்லை சூரியன் அனைவரையும் சுடும்நிலா அனைவரையும் காயும்மழை அனைவரையும் நனைக்கும்நிலம் அனைவரையும் தாங்கும் இந்து, முஸ்லிம், கிறித்தவன், பௌத்தன்,சமணன், நாத்திகன் எனப் பேதமின்றிஅனைவரும் சமமாக மிதந்தனர்பிணமாக சுனாமியில் கோவில், மசூதி, தேவாலயம், புத்தவிகாரம்என எந்தப் பேதமும் இன்றிசிதைந்து வீழ்ந்தன மண்ணில்நிலநடுக்கத்தில் இறைவனும் இயற்கையும்பேதம்

Read More
ஈர்ப்பு விதி

ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வழிமுறைகள்

ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வழிமுறைகள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதை அடைய வேண்டும் என்று விரும்பினாலும்; பணமோ, செல்வமோ, பொருளோ, புகழோ, ஞானமோ, உறவோ, அது எதுவாக இருந்தாலும் அதை அடைய உதவக்கூடிய சில வழிமுறைகள். 1. முதலில் நீங்கள் விரும்பும் விசயம், எதற்காக உங்களுக்கு வேண்டும் என்பதைச் சிந்தித்து தெளிவான முடிவுக்கு வரவேண்டும். 2. நீங்கள் ஆசைப்பட்டது கிடைத்தால், என்ன செய்வீர்கள்? அதனால் உங்களுக்கு என்ன பயன், அதனால் உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு என்ன பயன்?

Read More
காதல் கவிதை

இன்றைய காதல்

இன்று முதன் முதலில்அவளைப் பார்த்தேன்என்பதில் தொடங்கி அவளைத் தினமும்பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கிறேன்என்று தொடர்ந்து ஏண்டா அவளைப் பார்த்தேன்என்பதில் முடிகிறதுஇன்றைய காதல்

Read More
வாழ்க்கை கவிதை

வாழ்க்கை கவிதை

மாடி வீடு, ஏசி கார்வயல்வெளி, சிறிது காணிவங்கியில் ரொக்கம் வாழத் தேவையானஅனைத்தையும் சேர்த்துவிட்டேன்வாழத் தொடங்கலாம் என்றுஎண்ணும் போதுதான் உணர்ந்தேன் இதற்கு மேல் வாழ்வதற்குஎதுவுமில்லை என்பதைவிழித்துக் கொண்ட பின்புதான்இது கனவு என்பதை உணர்ந்தேன் வாழ்க்கையை உணரும் நேரத்திலேவாழ்வின் முடிவுக்கு வந்துவிட்டேன்எதிர்காலம் எனும் கனவினிலேநிகழ்காலம் தொலைத்துவிட்டேன் வாழ்க்கையின் இடையில் – பணம்தேடவேண்டும் என்பதை உணராமல்வாழ்க்கையைத் தொலைத்துபணத்தைச் சேர்த்தேன் சேர்த்த செல்வங்களில்பாதி ஊருக்கு, பாதிப் பேருக்குபாதி மருத்துவமனைக்குமீதம் இருந்தால்என் பிள்ளைகளுக்கு உடலைப் பிரிந்த உயிர்வில்லிலிருந்து சீரிய அம்புகூறிவிட்ட வார்த்தை மட்டுமல்லஇழந்துவிட்ட இளமையும்நிச்சயமாகத்

Read More
வாழ்க்கை கவிதை

வெளிநாட்டு வாழ்க்கை

உன் முகம் கூட முழுமையாகஎன் மனதில் பதியும் முன்னேஅயல்நாட்டில் கால் பதித்தேன் நாலு காசு சேர்க்க – நாலுகடல் தாண்டி வந்தேன்கொஞ்சம் கஷ்டங்களுடனும்நிறைய நினைவுகளுடனும்நாட்களைக் கடத்தி வந்தேன் நாளைக்குத் தேவைப்படும்என்ற எண்ணத்துடன்இன்றைய வாழ்க்கையைஅடகு வைத்தேன் நமக்காக நாம் வாழபெறும் செல்வம் தேவையில்லைஅடுத்தவனிடம் பேர் வாங்கவாழ்க்கையையே அடகு வைத்தேன் ஊருக்காக ஒரு வாழ்க்கைஉறவுக்காக ஒரு வாழ்க்கைபெயருக்காக ஒரு வாழ்க்கைகற்பனையில் ஒரு வாழ்க்கை நிகழ்காலத்தை விற்றுமுதுமைக் காலத்தைவாங்குவதுதான் வாழ்க்கையா? அடுத்தவன் திருப்திக்குத்தான்நான் வாழ வேண்டுமென்றால்எதுக்குடா இந்த வாழ்க்கை?

Read More
காதல் கவிதை

காதலை ஏன் மறைத்தாய்

என் காதலை நான்சொன்னபோதுஉன் காதலை ஏனோஒளித்து வைத்தாய் நம் காதல் என்பதைஉணராமல்பூவுக்குள் புயலைப்பூட்டி வைத்தாய் இறுதி வரையில் மௌனமாகிகடலுக்குள் பாறையாகஉன் ஆசையை ஏனடிமறைத்து வைத்தாய்?

Read More
காதல் கவிதை

காதலி

பஞ்சவர்ண நிலாவண்ண மலர்க்காடுதேன் சிந்தும் தேக்குஇசை பாடும் மூங்கில் பனியில் செதுக்கிய சிற்பம்உயிரை உருக்கும் ரோஜாராஜ போதையின் ராணிஎன் காதலி…

Read More
வாழ்க்கை கவிதை

வாழ்க்கை கவிதை

என்னடா?என்ற புலம்பலுடன்சிலர் வாழ்க்கையும் ஏன்டா?என்ற கேள்வியுடன்சிலர் வாழ்க்கையும் எதுக்குடா?என்ற அதிர்ச்சியுடன்சிலர் வாழ்க்கையும் எப்படிடா?ஆச்சரியத்துடன்சிலர் வாழ்க்கையும்அமைந்துவிடுகிறது கேள்விகளில் உள்ள“டா”க்களை நீக்கிவிட்டாலேகேள்விகளுக்கு விடைகளும்வாழ்க்கைக்கு தீர்வுகளும்கிடைத்துவிடும்

Read More