தமிழகத்தின் தண்ணீர் பஞ்சமும் தீர்வும்
“மாடுகட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனைகட்டி போரடித்த அழகான தென்மதுரை” என்று சொல்லும் அளவிற்கு விவசாயத்தில் செழித்து விளங்கிய தமிழகத்தில் தற்போது தண்ணீர்ப் பஞ்சம் உண்டானது ஏன்? வெகுநாட்களாக என் மனதில் இந்தக் கேள்வியும், இதற்கு விடை கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆவலும் இருந்து வந்தது. அண்மையில் தமிழகத்திற்கு சென்றிருந்த போது அங்கு 50 வயதுக்கும் மேற்பட்ட சில உறவினர்களைச் சந்தித்து, அவர்களின் இளம் வயதில் உண்டான தண்ணீர் தட்டுப்பாட்டைப் பற்றி விசாரித்தேன் அவர்களிடம் நான்